2ல் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்கள்.?!
Sevvai sani sernthirunthaal enna palan
1. 2ல் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?
விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.
ஏற்ற, இறக்கமான பொருளாதாரத்தை உடையவர்கள்.
கண் பார்வை சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பறப்பது போல் கனவு கண்டால் உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. என்னுடைய கழுத்தில் இருந்து மாங்கல்யம் உடைந்து விழுவது போல் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
4. உறவு முறைக்குள் (தாய்மாமன் மகள்) திருமண பொருத்தம் தேவையா?
ஜாதக ரீதியான பொருத்தங்கள் பார்ப்பது நன்மையாகும்.
5. மாடு கிணற்றில் விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மாடு கிணற்றில் விழுந்தது போல் கனவு கண்டால் கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் அலட்சியம் செய்யாமல் பயன்படுத்துவது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
6. திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் சுபவிரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. நான் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
8. செருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?
செருப்பை கனவில் கண்டால் புதிய நபர்களால் இடையூறுகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
Sevvai sani sernthirunthaal enna palan