தேங்காய், பணம், பாகற்காய்... கனவில் வந்தால் என்ன ஆகும் தெரியுமா..?!
Money came in dream
1.பௌர்ணமி அன்று வாகனம் வாங்கலாமா?
பௌர்ணமி அன்று வாகனம் வாங்கலாம்.
2.பாகற்காயை கனவில் கண்டால் என்ன பலன்?
பாகற்காயை கனவில் கண்டால் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3.நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்கு தூக்கி கொண்டு ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத புதிய சந்திப்புகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4.சாமி சிலையை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சாமி சிலையை திருடுவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5.சுயம்புலிங்கம் தங்க நிறத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
6.நண்பரின் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
7.பணம் கட்டுக்கட்டாக கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
8.தேங்காய் அழுகிய நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தேங்காய் அழுகிய நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.