திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை மூடல்.! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை மூடல்.!

தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். அறுபடை வீடு கொண்ட இவரின் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உற்சவ திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றத்தில் சொக்கநாதர் – மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண விழா இன்று நடைபெற உள்ளது. இந்தத் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட்டது. 

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருளுவதை முன்னிட்டு இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை நடை அடைக்கப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai meenatchi amman temple gate close


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->