கேது இந்த இடத்தில் அமர்ந்தால் அனுபவமும், திறமையும் உடையவராக இருப்பார்கள்!!
Astrology Ketu palangal
4-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள் :
பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவர் கேதுபகவான். கேதுபகவான் பிறப்பில் ஒரு அசுரன். விப்ரசித்து மற்றும் சிம்கிகைக்கு மகனாக பிறந்து வளர்ந்தார்.
ஒருவரின் ஜாதகத்தில் கேதுபகவான் பலம் குறைந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனக்குழப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர்-புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை ஏற்படும்.
இவரின் தானியம் 'கொள்ளு". எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.
லக்னத்திற்கு 4-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள்.
4ல் கேது இருந்தால் என்ன பலன்?
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு மறையும்.
உறவுகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.
மனை சார்ந்த செயல்பாடுகளில் இடையூறுகள் உண்டாகும்.
அனுபவமும், திறமையும் உடையவர்கள்.
எதிலும் பற்றற்ற நிலையை உடையவர்கள்.
சிற்ப வேலைகளில் ஈடுபாடு உடையவர்கள்.
மூலிகை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.