என்ன அவசரம்... வேணும்னா, எங்க அப்பாவுடன் உல்லாசமாக இருந்துக்கோ! ஷாக் கொடுத்த புதுமாப்பிள்ளை!!
wife complaint against the husband
விருதுநகர், கட்டையாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். நெல்லையை சேர்ந்த ரம்யாவுக்கு, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சரவணனுக்கு கடந்த ஜுன் மாதம் திருமணம் நடைபெற்றது .
திருமணத்திற்கு 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் தந்துள்ளனர். திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அன்றைய தினம் இரவு பல கனவுகளுடன் மணமகள் இருந்துள்ளார். ஆனால், இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை.
ரம்யாவிடம் மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, மற்றும் கணவனின் சகோதரிகள் எல்லாரும் வந்து இன்று உங்களுக்கு
முதலிரவு நடக்காது என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சரவணனை தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.
அதுக்கு என்ன அவசரம்? என் அப்பா மூக்காண்டி ரொம்ப தொந்தரவு பண்ணவேதான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். உனக்கு வேண்டுமானால் அவருடன் உல்லாசமாக இருந்துக்கோ என்று சொல்லியதுடன், ரம்யாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் சரவணன். இதனை தொடர்ந்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராதா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் புதுமாப்பிள்ளை சரவணன் உட்பட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.
English Summary
wife complaint against the husband