கணவன் மனைவி உறவு கடைசி வரை சீராக அமைய, கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும்! மருத்துவர்களின் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


தாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரியான  முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்கள்.

முதலில் தாம்பத்திய வாழ்க்கைக்கு துணைவி தயாரா என தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக தற்போதைய காலத்தில் ஆண்களுக்கு வேலைச்சுமை அதிகம் உள்ளதை புரிந்துகொள்கிறார்கள் வாழ்கை துணைவி. தன் கணவன் அலுவலகத்தில் அதிகம் பணிச்சுமையுடன் வீடு திரும்புகிறார் என்று நினைத்து, அவர்களுக்கு உறவில் விருப்பம் இல்லாவிட்டாலும் கணவனுக்காக ஒத்துழைக்கிறார்கள். அதை கணவன் புரிந்துகொள்ளாவிட்டால் உறவு காண்பது யார்க்கும் பிரோஜனம் இல்லை.

சிலரது மத்தியில் கணவன், மனைவி தான் எப்போதுமே முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இதற்காக வெட்க பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஒருசிலருக்கு கூச்ச சுபாவமாக இருக்கலாம். ஆதலால், நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தாம்பத்தியம் மேலோங்க உதவுமே தவிர, தவறாக வாய்ப்பில்லை. எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது அவசியம்.

தம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டியது கட்டாயம் என உடலுறவு சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நிறைய பேசிக்கொள்ள முடியும், அன்யோன்யம் பெருகும்.

ஆர்வம் ஏற்படும் போது மட்டும் உடலுறவில் ஈடுபடுங்கள். துணை விருப்பமாக இருக்கிறார் என ஆர்வம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது, தாம்பத்தியத்தின் மீதான ஆசையை குறைக்கும். மேலும், விரக்தியாக உணர வைக்கும். இதனால் கணவன் மனைவி பிரிவு கூட ஏற்படும்.

ஆபாசப் படங்கள் (போர்ன்) பார்ப்பது தவறல்ல. ஆனால், அதே போல ஈடுபட நினைப்பது, தம்மால் அப்படி ஈடுபட முடியவில்லை என வருந்துவது தான் தவறு. துணைவியாருக்கு அதை பார்க்க விருப்பமில்லாத பொது அவர்களை கட்டாய படுத்துவது ஆபத்தில் முடியும்.

உங்கள் இருவருக்குள்ளும் எந்த ரகசியத்தையும் மறைத்து வைக்க வேண்டாம். மனதளவில் குழப்பம், சந்தேகம், பிரிவு ஏற்பட்டால் அது கண்டிப்பாக உடலுறவை பாதிக்கும். என்னவாக இருந்தாலும் இருவரும் பகிர்ந்துகொண்டாள் உங்கள் வாழ்கை மிக அழகாகவும், எந்த பிரச்னை இலலாமலும் சுமுகமாக செல்லும்.

நிர்வாணமாக உறங்குவது மன ரீதியான இறுக்கத்தை, இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். உடலுறவு சார்ந்த சந்தேகங்கள், அல்லது உடலுறவு பற்றி பேசுவதை தவறாக நினைக்க வேண்டாம். உடலுறவு என்பது தம்பதி இருவர் மத்தியிலான அந்தரங்க சமாச்சாரம். உங்கள் இருவர் மத்தியிலான ஒன்றை நீங்களாக பேசி தெளிவு பெறுவது நல்லது.

உடலுறவுக்காக மட்டும் பிரியத்தை வெளிப்படுத்த வேண்டாம். உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் அதிக அன்பை காண்பிக்க வேண்டாம். ஏனென்றால் பெண்களுக்கு அதுமட்டுமில்லாமல், குழந்தை, அப்பா அம்மா, சொந்தபந்தம் என நிறைய நிர்பந்தங்கள் உள்ளன.

இந்நாளில் உறவில் ஈடுபடுவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துக் கொள்வது, உறவில் சிறந்த உணர்வை ஏற்படுத்தும். இதனால் உங்களுடைய உறவும் நீடிக்கும். தயவு செய்து எந்த ஆண்மகனும் தனது துணைவியாரின் விருப்பமில்லாமல் உறவு கொள்ளாதீர்கள். ஏனென்றால் அது ஒரு துரோகமான செயல். கணவன் மனைவியின் உறவானது வாழ்கை முழுவதும் சிறப்பாக, அன்பாக அமையவேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது மிக அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The relationship between husband and wife will remain steadfast until the end, and must be observed!


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->