தமிழகத்தில் இன்று மழை பெய்யப் போகும் பகுதிகள்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
feb 22 rain in tamilnadu
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.2.2021 : தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.2.2021 மற்றும் 15.2.2021 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலான வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.