"ஆட்சி முடியும் நேரத்தில் எதற்கு வித்தை காட்டுறிங்க?" திமுக-வை வறுத்தெடுத்த விஜய்!
Why Lay Foundation Stones Now Vijay Slams DMK Exit Phase Politics
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டுடன் களமிறங்கிய தவெக தலைவர் விஜய், திமுக அரசின் 'கடைசி நேர' அரசியலைத் தனது பாணியில் எள்ளி நகையாடினார்.
விவசாயமும் - விஜய்யும்:
"கடவுளுக்கே சோறு போடுபவர்கள் விவசாயிகள். அடுத்த பிறவியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், தவெக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயர் துடைப்பதே முதல் முன்னுரிமை என்றார். பரந்தூர் விமான நிலையப் போராட்டமே தவெக-வின் அரசியல் பயணத்தின் தொடக்கப்புள்ளி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
திமுக மீதான அதிரடிச் சாடல்:
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை விஜய் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார்:
மணல் மாஃபியா: தமிழகம் நீர் இல்லாமல் திவால் ஆகும் நிலையில் இருப்பதற்குக் காரணம், ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நடக்கும் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையே என அவர் சாடினார்.
அடிக்கல் அரசியல்: "ஏற்கனவே கடன் சுமையில் மூழ்கியுள்ள திமுக அரசு, தனது பதவிக்காலம் முடியப்போகும் நேரத்தில் இப்போது அவசரம் அவசரமாகப் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது யாரை ஏமாற்ற?" எனக் கேள்வி எழுப்பினார்.
மீனவர் நலன்: மீனவர்கள் தாக்கப்படும்போது "மானே... தேனே..." என உணர்ச்சியற்ற வெற்றுக்கடிதங்கள் எழுதுவதை விட்டுவிட்டு, இனி நம் மீனவர்கள் மீது யாரும் கை வைக்க முடியாதபடி தவெக அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளித்தார்.
"ஒவ்வொரு பூத்திலும் ஒலிக்கும் விசில் சத்தம் ஓட்டுகளாக மாற வேண்டும். ஊழலற்ற நேர்மையான ஆட்சியைத் தர இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்" என விஜய் முழங்கினார்.
English Summary
Why Lay Foundation Stones Now Vijay Slams DMK Exit Phase Politics