விஜயகாந்த் எங்கே... ஜோசப் விஜய் எங்கே...? இருவரையும் ஒப்பிடுவது தப்பு...! - டிடிவி தினகரன் ஓப்பனாக பேச்சு - Seithipunal
Seithipunal


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூர் சம்பவம், தமிழக அரசின் செயல்பாடு, அரசியல் கூட்டணிகள் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜயின் அரசியல் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ள விளக்கங்களின் உண்மைத்தன்மை குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அந்த விசாரணையின் முடிவில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிவித்தார்.

கரூர் துயரச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிய பணி நியமனத்தை மட்டும் தீர்வாகக் கருத முடியாது என்றும் விமர்சித்தார்.

முதலமைச்சரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், திரைப்படப் புகழின் தாக்கம் அரசியல் மேடைகளிலும் பிரதிபலிப்பதாக பலரும் கூறுவதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் போது திரைப்பட வசனங்களைப் போன்ற உணர்ச்சிமிக்க பேச்சுகளை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருப்பு நிற உடை அணிந்திருந்தாலும், அவரது பேச்சிலும் வெளிப்பாட்டிலும் துயரத்தின் உணர்வு வெளிப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட கருத்துகளையும் சுட்டிக்காட்டி, மக்களின் தீர்ப்பே இறுதியானது என்றும், யாரை அரசியலில் இருந்து விலக்க வேண்டும் என்பதை தமிழக மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

திரைப்பட உலகில் பெற்றிருந்த பிரபலத்தன்மை காரணமாகவே முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சிப் பொறுப்பை அடைந்தார் என்பதை மறுக்க முடியாது என்றும், தற்போதைய அரசு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தற்போதைய ஆட்சியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் சூழ்நிலைகள் மாறும்போது எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளும் ஒன்றிணையும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அறிஞர் அண்ணா மற்றும் ராஜாஜி இணைந்து செயல்பட்ட வரலாற்றை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். அதுபோலவே, எதிர்கால அரசியல் சூழல் தேவையெனில் திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்காக வேறு கட்சிகள் இணைந்து செயல்திட்டம் வகுப்பதில் தவறில்லை என்றும், அதனை தீர்மானிப்பது அன்றைய அரசியல் சூழலே என்றும் தெரிவித்தார்.இறுதியாக, மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜயை ஒப்பிடுவது பொருத்தமற்றது என்றும், இருவரின் பொது வாழ்க்கை அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்டது என்றும் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where Vijayakanth Where Joseph Vijay It wrong compare two TTV Dhinakaran speaks openly


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->