என்ன ஆட்சி இது!!! அப்போ இதுவரை நிரபராதிகளை தான் கைது செய்தார்களா...?- நயினார் நாகேந்திரன்
What kind of government is this So have they only arrested innocent people so far Nainar Nagendran
பா.ஜ.க மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.சிவகிரி இரட்டைக்கொலை, விடுதியில் பள்ளி மாணவி வன்கொடுமை என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பு.
சிவகிரியில் இரட்டைக்கொலையில் பிடிபட்டவர்கள் இதற்கு முன்பு 19 கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.19 கொலைகள் தொடர்பாக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா?
சிவகிரி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளி என்பதில் நம்பிக்கை இல்லை. 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
What kind of government is this So have they only arrested innocent people so far Nainar Nagendran