வேலூர்: விலகிய கள்ளக்காதலியை அடித்தே கொலை செய்த காதலன்! அடுத்து நடந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


வேலூரில் பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சபீனாபானு (33) என்ற அடித்து கொலை செய்த  இளைஞர் சுரேஷ் (35) என்பவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தைச் சேர்ந்தவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாலும், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

சதுப்பேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வந்த அவர், அதே நிறுவனத்தில் பணியாற்றிய சுரேஷுடன் பழகியதாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதமாக சபீனாபானு தொடர்பை விலக்கிக் கொண்டதனால், சுரேஷ் கடும் மனவருத்தத்தில் இருந்தார். வியாழக்கிழமை இரவு சபீனாபானுவின் வீட்டிற்கு வந்த சுரேஷ், தகராறில் ஈடுபட்டு, தனது பக்கத்தில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரையும், தடுக்க வந்த அவரது பெற்றோர்களையும் தாக்கினார்.

தப்பியோடிய சபீனாபானுவை வீட்டு அருகே மின்கம்பம் பகுதியில் மீண்டும் தாக்கிய சுரேஷ், அவரை அப்போதே கொலை செய்துவிட்டார். பின்னர், விருபாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore Woman murder case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->