"பெரம்பலூர் வந்தால் பெட்ரோல் பாம் வீசுவேன்" சீமான், இடும்பாவனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக நபர்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான் "பெரம்பலூர் வாந்தால் பெட்ரோல் பாம் வீசுவேன்" என விசிக நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து  இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''திருமாவை இன்னொரு கருணாநிதி எனக் குறிப்பிட்டதற்கு, "பெரம்பலூர் வந்தால் பெட்ரோல் பாம் வீசுவேன்" என்கிறார் விசிகவைச் சேர்ந்த தம்பி ஒருவர்.  "தைரியம் இருந்தா, என் ஏரியாவுக்கு வந்து பாருடா" என சுந்தர்.சிக்கு சவால் விடும் வடிவேலு மாதிரி!

திருமாவைக் கருணாநிதி எனக் குறிப்பிட்டது அவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றால், எதுக்கு வெட்கங்கெட்டு திமுக கூட்டணியில் இருக்கீங்க?

திருமா அண்ணாத்த! எதிரியை சனநாயகப்படுத்தணும்னு ஊருக்குப் பாடமெடுப்பீங்களே, உங்க கட்சிக்காரன பெட்ரோல் பாம் அடிக்குற அளவுக்கு சனநாயகப்படுத்தி இருக்கீங்க..!

வாழ்த்துகள் திருமாவளவன்" என்று தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vck bomb thread to ntk seeman


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->