நம்பிக்கை துரோகம்! ஒன்றரை கோடிக்கும் மேலான நகைகளை சீருடைக்குள் மறைத்து மாயமான பெண்...! - நகைக்கடையில் பரபரப்பு - Seithipunal
Seithipunal


அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்ற பெண் விற்பனையாளர், கடந்த 11 மாதங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று அவசர தேவையொன்றை காரணமாக கூறி, தனது சக ஊழியர்களிடம் விடுப்பு பெற்றதாக தெரிவித்த ஹர்ஷிதா, மாலை சுமார் 4.30 மணியளவில் கடையிலிருந்து அவசரமாக வெளியேறியுள்ளார்.

இதையடுத்து அன்றைய மாலை கடையில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல் ஒன்று காணாமல் போனதை ஊழியர்கள் கவனித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஹர்ஷிதா கடை உரிமையாளர் தர்ஷன்பாயிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் கடையில் முழுமையான கணக்காய்வு மேற்கொண்டபோது, சுமார் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட ஏராளமான நகைகள் மாயமானது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, ஹர்ஷிதா நகைகளை தனது சீருடையினுள் மறைத்து வைத்து கடையிலிருந்து வெளியேறிய காட்சிகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான திருட்டுச் சம்பவம் தொடர்பாக காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்ததிலிருந்து ஹர்ஷிதாவின் கைப்பேசி அணைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஹர்ஷிதாவை கண்டுபிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman disappeared after hiding more than one and half crores jewellery her uniform stir jewellery shop


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->