அசிங்கப்பட்டு இருக்காதிங்க! விசிக, கம்னியூஸ்ட்டை கூட்டணிக்கு அழித்த எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையில், “திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, கம்னியூஸ்ட் நடத்தும் கூட்டங்கள், கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் கூட தி.மு.க. ஆட்சி அனுமதிக்காத நிலையில் உள்ளன. இவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா?

ஜனநாயகத்தைத் தகர்க்கும் இந்த ஆட்சி, எதிர்கட்சிகள் பேசவே முடியாத சூழலை உருவாக்கி வருகிறது.

வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும் இடங்கள் குறைக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் அவர்கள் ஜால்ரா அடிப்பதை மக்களே பார்கிறார்கள். அந்த அளவுக்கு அசிங்கப்பட வேண்டாம்” என்று எடப்பாடி பழனிச்சாமி  எச்சரித்தார்.

“தற்காலிக லாபத்திற்காக தி.மு.க.வை நம்பும் கட்சிகள், முன்னர் அனைத்தும் அ.தி.மு.க.வுடன் இணைந்தவர்கள் தான். இப்போது மீண்டும் அதே கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தால், ரத்தினக் கம்பளத்துடன் வரவேற்போம்” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK ADMK Communist Edappadi Palaniswami DMK


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->