வண்டி வண்டியா பணம்! நீட் மட்டும் தான் உலகமா? அரங்கை அதிரவைத்த விஜய்!
TVK Vijay Speech
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டும் நிகழ்வைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய். 2025 ஆம் ஆண்டுக்கான இந்த பாராட்டு விழா 3 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட விழா மாமல்லபுரத்தில் உள்ள ஓர் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தேர்வில் மேன்மை பெற்ற மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர். விழாவில் விஜய் மாணவர்களிடம் நேரில் உரையாற்றினார்.
அவரது உரையில்,
“தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இது வெறும் தேர்வு வெற்றி மட்டுமல்ல, உங்களது ஒழுங்குமுறை, பொறுப்பு உணர்வின் வெளிப்பாடாகும்,” என்றார்.
“படிப்பு முக்கியம், ஆனால் அதில் மட்டுமே மனதை உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் நீட் ஒன்றிலே உலகம் முடிவடையாது. வாழ்க்கையில் நீட்டை விடப் பெரிய பல வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
தேர்தல்களில் உங்கள் ஜனநாயகக் கடமையைச் செயற்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தாரையும் அதற்குத் தயார்படுத்துங்கள்.
பணம் மற்றும் பரிசுகளை ஏற்று ஓட்டு போடும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டாம். அடுத்த தேர்தலில் வண்டி வண்டியா பணத்தை கொட்ட போறாங்க, பணமழை இருக்கும், அது உங்கள் பணம் தான், நீங்கள் கட்டிய வரிப்பணம் தான். பணம் வாங்கி உங்கள் எதிர்காலத்தையே விற்றுவிடக்கூடாது.
சாதி, மத வேறுபாடுகள் உங்களைப் பிரிக்க வேண்டாம். ஒற்றுமையாக இருந்து சமூக மாற்றத்திற்கு வழிவகையுங்கள்,” என பேசினார்.