காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்கு 4 முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
Four times bomb threat to Karaikal JIPMER Hospital
காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் கவர்னர் மாளிகை முதலமைச்சர் வீடு கலெக்டர் ஆபீஸ் பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகளை வீசி சேர்ந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இந்தநிலையில் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து காரைக்கால் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.மருத்துவமனைக்குள் டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 4வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..தொடர்ந்து மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
English Summary
Four times bomb threat to Karaikal JIPMER Hospital