மனமார்ந்த நன்றி... "தர்மம் மறுபடியும் வெல்லும்".. திருச்சி எம்.பி-யின் பரபரப்பு அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. 

இதனால் அதிர்ச்சியில் இருந்த திருநாவுக்கரசர் தற்போது நீண்ட அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பாக "திருச்சி இரண்டாவது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். 

மக்கள் என்னை எப்போதும் சந்திப்பது போலவும், தொலைபேசி வாயிலாகவும், திருச்சி அலுவலகத்திலும், எப்போதும் போல் என்னை சந்திக்கலாம், தொடர்பு கொள்ளலாம். கடந்த சுமார் 48 ஆண்டுகளாக எனக்குள் மத்திய மாநில அரசுகளின் தொடர்பு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிந்த நன்மைகளை திருச்சி தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து செய்து பணியாற்றுவேன்.

1977-ல் அமரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் சட்டமன்ற உறுப்பினரான அந்த காலம் தொட்டு மத்திய மாநில பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் எந்த அரசு பொறுப்புகள் வகிக்காத காலத்திலும் பொது மக்களின் நலனுக்காக பணிகளை ஆற்றுவதில் இருந்தும் மக்கள் தொடர்பு இருந்தும் எப்போதும் நான் ஓய்வு பெற்றதே இல்லை. 

என் வாழ்நாளில் என் இல்லத்தில் நான் இருந்த நாட்களை காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களை அதிகம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நான் பலமுறை சுற்றி வந்து மக்களை சந்தித்துள்ளேன். எனது மக்கள் பணி தொடரும்.

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது உதவிய துணை நின்ற மாநில, மத்திய அரசு அலுவலர், மக்கள், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு பொதுநல சங்கங்கள், அமைப்புகள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள், பொதுமக்கள் என ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பெருமக்களுக்கும் எனது கோடான நன்றிகள்.

இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக்கூடாது என இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தர்மம் மறுபடியும் வெல்லும். மீண்டும் தொகுதி மக்களுக்கும் நன்றியும் வாழ்த்தும் வணக்கமும்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy MP thirunavukkarasar statement he not contest


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->