"ஆளுநரின் திமிரை அடக்க வேண்டும்": ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal



ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசிய வீடியோவை தனது 'எக்ஸ்' (X) தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள்

தமிழ்மொழி பற்று: தாய்மொழிப் பற்று குறித்துத் தமிழக மக்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் ஆளுநருக்கு ஏன் வயிறு எரிகிறது?

திமிரும் சதியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும். மக்களுக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையேயான பாசப் பிணைப்பைக் கெடுக்க அவர் சதி செய்கிறார்.

அவதூறு: தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாக ஆளுநர் தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்.

பா.ஜ.க. மீதான விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி புகழ்ந்து பேசும் பா.ஜ.க. ஆட்சியைக் குறித்தும் விமர்சித்தார்:

பஹல்காம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் போன்றவை பா.ஜ.க. ஆட்சியில்தான் நடந்துள்ளன.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காத பா.ஜ.க. ஆட்சியைக் கவர்னர் புகழ்ந்து பேசுகிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படியே தொடர்ந்து பேசினால், தி.மு.க.வுக்கு வேலை ஈஸி ஆகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Governor vs TN Chief Minister MK Stalin DMK BJP


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->