திருமணத்தில் மகத்தான பரிசு கொடுத்த மணப்பெண் தோழிகள்.. கண்கலங்கிப்போன மணமகன்.! - Seithipunal
Seithipunal


திருமண விழாவில் புதுமண தம்பதிகளுக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

தற்போது கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. 

வெங்காயத்தின் விலையேற்றம் என்பது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும். தற்போது இந்தியாவில் பருவமழைக்காலம் என்பதால் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. பின்னர் பருவமழைக்காலம் கடந்ததும் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியை சந்திக்கும். 

ஆனால், வியாபாரிகள் கொள்ளையடிக்க நினைக்கும் போது பல தருணங்களில் தற்காலிக விலையேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வெங்காயத்தை பதுக்கியும் விலையேற்றத்தை மறைமுகமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் 5 கிலோ வெங்காயத்தை மணப்பெண்ணின் தோழிகள் பரிசுகளாக வழங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvallur Marriage Gift for Couple


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->