தேர்தல் நேரத்தில் அரசை சிக்கவைக்கும் சதி நடக்கிறது...! – சபாநாயகர் அப்பாவு வெளிப்படையான குற்றச்சாட்டு...!
There conspiracy implicate government during election Speaker Appavus open accusation
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறந்து வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பல முக்கியமான கருத்துகளை பகிர்ந்தார்.அவர் தெரிவித்ததாவது,"அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ கடிதமும் சட்டமன்றத்துக்கு இதுவரை வரவில்லை. அவ்வாறு கடிதம் வருமாயின், அதனை பரிசீலித்து உரிய தீர்மானம் எடுக்கப்படும்.

சட்டமன்றம் முழுமையாக சட்டத்தின் வழியில் செயல்படும்” என்றார்.பிரதமரின் தமிழகம் குறித்த சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளித்த அவர், “ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் நபர், தமிழக மக்களை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. வடமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள், இங்கு எந்தவித துன்பமும் அனுபவிக்கவில்லை மாறாக, தமிழக அரசின் பல நலத்திட்டங்களின் பயனாளிகளாக உள்ளனர்.
இலவச பஸ் பயணம் முதல் கல்வி உதவித்தொகை வரை, அனைவரும் சமமாகப் பயனடைந்து வருகின்றனர்” என்று வலியுறுத்தினார்.அவர் மேலும் கூறுகையில், “பாபநாசம் – மணிமுத்தாறு அணைகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளது. எனினும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அதனை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்கள் திறந்தவெளியில், முழுமையான வெளிப்படை முறையில் நிரப்பப்பட்டுள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அமைச்சர் நேரு நியமனம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “இந்த நியமனத்தில் எந்த வித குறையும் இல்லை” என்றார்.அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்: “இந்த கடிதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நேர்மாறானது.
உறுதிப்படுத்தப்படாத ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை தொடங்குவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கிறது” என்றார்.அவர் முடிவில் கூறுகையில், “மணல் ஊழல், டாஸ்மாக் ஊழல் போன்ற உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை வைத்து தமிழக அரசை தேர்தல் நேரத்தில் சிக்கவைக்க சில மத்திய அமைப்புகள் செயல்படுகின்றன.
இதற்கு தமிழக மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள்” என்றார்.மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் சிலவற்றிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், மீதியை கவர்னர் இன்னும் பரிசீலனையில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
There conspiracy implicate government during election Speaker Appavus open accusation