டாஸ்மாக் வழக்கில் தீர்ப்பு! செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் - பாஜக போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் சோதனை விவகாரத்தில், மேற்கொண்ட விசாரணை சட்டவிரோதமானது என அறிவிக்கவும், அதிகாரிகளை "விசாரணை" என்ற பெயரில் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டாஸ்மாக் மீதான சோதனையை அமலாக்கத்துறை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் சட்டத்திற்குட்பட்டே இந்த சோதனைகள் நடைபெறுகின்றன என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது வரவேற்கத்தக்கது. 

அமலாக்கத்துறை உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை, ஊழல் புரிந்தவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tasmac ED Chennai High Court judgement bjp narayanan statement dmk senthilbalaji


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->