சீதாராம் யெச்சூரி மறைவு - ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நல குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சீதாராம் யெச்சூரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "மூத்த சிபிஐ-எம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். 

இந்திய அரசியலில் அவர் ஆற்றிய தாக்கம் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். ஓம் சாந்தி" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu governor rn ravi condoles to seetharaman yechuri death


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->