தமிழக முதல்வர் ஸ்டாலின் மார்ச்-31ஆம் தேதி டெல்லி பயணம்.. பிரதமருடன் முக்கிய ஆலோசனை.!
Tamilnadu chief minister MK Stalin meet PM Modi
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மேலும், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு திறப்பு விழா மற்றும் முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார்.
துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை அவர் சென்னை திரும்புகிறார்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அன்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் புதிதாக திறக்கப்படவுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறார்.
அதன் பின்னர் மார்ச் 31ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.
அதன் பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி டில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அன்று இரவே சென்னை திரும்புகிறார்.
English Summary
Tamilnadu chief minister MK Stalin meet PM Modi