ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபையில் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா” தற்போது அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த மசோதா வழக்கமான நடைமுறையின்படி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டது.

அரசு எதிர்பார்த்தது போல ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ, அல்லது விளக்கத்திற்காக சட்டசபைக்கு திருப்பி அனுப்பவோ இல்லை. அதற்கு பதிலாக, ஆளுநர் அதனை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசு கடும் அதிருப்தியடைந்தது.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு முரணானது என தமிழக அரசு குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநர் மசோதாக்களை கையாளும் விதம் தன்னிச்சையானது என்றும், சட்டமன்றத்தின் அதிகாரங்களை புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தது. அதனுடன் இணைந்து “விளையாட்டு பல்கலைக்கழக” மசோதா தொடர்பான வழக்கையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஹரிஷ்குமார் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, இரு வழக்குகளும் நாளை (அக்.14) ஒன்றாக விசாரணைக்கு வருவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், ஆளுநர்-தமிழக அரசு இடையிலான அரசியல் மற்றும் சட்ட மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court TN Government TN Governor


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->