ஆளுநர் இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த காலத்தில் மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், அரசு துறைகளின் சார்பில் எந்தவிதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய இல. கணேசன், தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை இல்லத்தில் திடீரென நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பலனின்றி ஆகஸ்ட் 15 மாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seven day state mourning begins in Nagaland governor death


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->