கணவரின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா..ஓபிஎஸ் சகோதரர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


தனது கணவர் நடராசன் நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

புதிய பார்வை இதழ் ஆசிரியர் ம.நடராசன் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார். இவரது நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இவரது மனைவியும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான வி கே சசிகலா இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் இவருடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான், நடிகை சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் சசிகலாவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala, who paid tribute on her husband's memorial day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->