திமுக - கருணாநிதியின் குடும்ப - வாரிசு அரசியலை போட்டு தாக்கிய தளபதியின் தந்தை எஸ்ஏசி.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு மாநாடு பட வெற்றி விழாவுக்கு வந்திருக்க வேண்டும்., வெற்றி வந்தவுடன் நடிகர் சிம்பு இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று, எஸ் ஏ சந்திரசேகர் மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிகள் உரையாற்றினார்.

தயாரிப்பாளர் உன்னை நம்பி எவ்வளவு முதலீடு செய்துள்ளார். நீ இந்த வெற்றி விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று, நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், 'மாநாடு' திரைப்படம், மத அரசியல் இந்தியாவையும், வாரிசு அரசியல் தமிழ்நாட்டையும் இணைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (மத அரசியலுக்கு பாஜகவை குற்றம் சாட்டுவதும், தமிழகத்தின் வாரிசு அரசியலுக்கு பெயர்போன திமுக மற்றும் கருணாநிதியின் வாரிசு அரசியலும் குற்றம் சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது)

தொடர்ந்து பேசியா எஸ்ஏசி, தமிழகத்தில் காமராஜருக்குப்பின் நல்ல ஒரு முதல்வரை தமிழகம் காணவில்லை., அதனால்தான் மாநாடு படத்தில் முதல்வர் நல்லவராக காட்டியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

மத அரசியல் இந்தியாவையும், வாரிசு அரசியல் தமிழ்நாட்டையும் மாநாடு திரைப்படம் இணைத்துள்ளது" என்று மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SAChandrasekhar Simbu Maanaadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->