மே 24ம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம் மேற்கொள்ள காரணம் என்ன....? - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்படுகிறது.

அவ்வகையில், நேற்று இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி தொடங்கியது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 நாள் சுற்றுப்பயணமாக உதகை சென்றுள்ள அவர் மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மேலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24,60,000 செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டது.

இந்த இல்லத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து அவர், படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason Chief Ministers visit to Delhi on May 24th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->