இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.. பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


இராஜேந்திர பிரசாத்:

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர்.

புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற இராஜேந்திர பிரசாத் முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெற செய்தார். இது இராஜேந்திர பிரசாத் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்திய குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் இராஜேந்திர பிரசாத் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

1953ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியருமான பால் கிரக்மேன் பிறந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajendra prasad birthday 2020


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->