சுற்றி வளைத்து பதில் சொல்லாதீங்க! நேரடியாவே கேட்கிறேன் - கொந்தளித்த ராகுல்காந்தி!
Rahul Gandhi vs Election commission
2023 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" நடந்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தேர்தல் ஆணையர் நியமன முறை சீர்குலைக்கப்பட்டது. போலி வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டு பட்டியலில் பெயர்கள் கூடியது
வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் மீறப்படியது. போலி வாக்களிப்பு மூலம் பாஜகவுக்கு வெற்றி ஏற்படுத்தப்பட்டது
இதற்கான ஆதாரங்களை மறைத்து வைக்கப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இது ஆதாரமற்றது, சட்டத்தின் ஆட்சி மீது தாக்கம் செய்பவையாக இருக்கிறது என்று தெரிவித்தது.
இந்நிலையில், "தேர்தல் ஆணையமே, நீங்கள் அரசியலமைப்புச் சார்ந்த அமைப்பு. என் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், கையெழுத்தில்லா அறிக்கைகள் மூலம் தவிர்க்க நினைப்பது நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும்," என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். மேலும்,
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சமீபத்திய தேர்தல் வாக்காளர் பட்டியல்,
மாலையில் 5 மணிக்கு பிறகு பதிவான வாக்குசாவடிக் காட்சிகள்,
இவை அனைத்தும் பொது பார்வைக்காக வெளியிட வேண்டும் என்று ராகுல்காந்தி கோரியுள்ளார்.
"உண்மையை மறைக்கவில்லை என்றால், சுற்றி வளைத்து பதில் சொல்லாதீங்க. என் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளியுங்கள்," என ராகுல் காந்தி கடுமையாக பதிலளித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi vs Election commission