ஆடம்பர வாழ்க்கை, உல்லாசம்..இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: டாக்டர் செய்த செயலால் அதிர்ந்த சென்னை! - Seithipunal
Seithipunal


நித்யா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி பல வாலிபர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேசி, தன்னை அரை நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம், நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம் என நிர்ணயித்து பலரிடம் பணம் வசூலித்து உள்ளது தெரியவந்தது.

சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் 23 வயதான  நித்யா. இவர் அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாக பெற்றோரிடம் கூறி அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கினார்.

அப்போது கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் நித்யாவுக்கு காதல் மலர்ந்து கடந்த 2 மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே பாலமுருகனுடன் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல்  வசித்து வந்தார்.

இந்தநிலையில்தான் கடந்த 4-ந்தேதி மாலை தனது பெற்றோர் வீட்டுக்கு வருவதாக கூறி காதலன் பாலமுருகனை அவனது நண்பர் வீட்டுக்கு  நித்யாவு அனுப்பி வைத்து விட்டார். மறுநாள் 5-ந்தேதி பாலமுருகன் வீட்டுக்கு வந்தபோது, நித்யா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டில் இருந்த 25 பவுன் நகையும் மாயமானதாக நித்யாவின் பெற்றோர் புகார் அளித்ததால் இந்த சந்தேக மரணம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் பெற்றோர் மற்றும் காதலன் பாலமுருகன் ஆகியோரிடம் விசாரித்து வந்தனர்.

நித்யா கடைசியாக சேலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற டாக்டரிடம் பேசியது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடைசியாக நித்யா வீட்டுக்கு வந்து சென்றதும் அவர்தான் என தெரியவந்தது.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டாக்டர் சந்தோஷ்குமாரை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்தான், நித்யாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

அப்போது  டாக்டர் சந்தோஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலம் :-சேலத்தை சேர்ந்த நான், சென்னையில் தங்கி  தனியார் ஆஸ்பத்திரியில் 2 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது நித்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு  காதலாக மாறியது.

இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். அதை செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து உள்ளார். அவற்றை எனக்கு அனுப்பி, என்னை மிரட்டி  ரூ.8 லட்சத்துக்கும் மேல் பறித்துக்கொண்டார். நித்யா, மீண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று மிரட்டி பணம் கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், நித்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து  4-ந்தேதி இரவு நித்யா வீட்டுக்கு சென்றேன்.அன்று இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார். அப்போது மது போதை மயக்கத்தில் கிடந்த நித்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல் இருப்பதற்காக அவருக்கு அருகில் சில மாத்திரைகளை போட்டேன்.பின்னர் நித்யா வீட்டில் லாக்கரில் இருந்த 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறுநாள் காலை தப்பித்து சைதாப்பேட்டை சென்றேன். 

மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையான நித்யா பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலையான நித்யா, ஐ.டி. நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யாமல் தனது பெற்றோர் மற்றும் காதலனை ஏமாற்றி வந்துள்ளார். நித்யா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி பல வாலிபர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேசி, தன்னை அரை நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம், நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம் என நிர்ணயித்து பலரிடம் பணம் வசூலித்து உள்ளார்.

இதுபோல் பணம் கொடுப்பவர்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பறித்து சொகுசாக வாழ்ந்துள்ளார்.  ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திசைமாறி போன நித்யா, கடைசியில் தனது உயிரையும் இழந்துவிட்டார்.

நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது அவருக்கு மேலும் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.சந்தோஷ்குமாரை கைது செய்தபோலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இளம்பெண் கொலை வழக்கில் டாக்டர் சந்தோஷுக்கு வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Luxury lifestyle indulgence A sudden turn in the life of a young woman Chennai shocked by the actions of a doctor


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->