வில்லியனூர்,  திருக்காமேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்..துணைநிலை ஆளுநர்,முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் வில்லியனூர், கோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்து கோயிலில் தரிசனம் செய்தார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கோகிலாம்பாள் உடனுறை திருக்காமீஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாசம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் வைகாசி திருவிழா தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பாக அபிஷேகங்கள் மற்றும் வீதியிலாக நடைபெற்று வந்தன, விழாவின் முக்கிய சீரக நிகழ்ச்சியான திரு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

வில்லியனூர், கோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்து கோயிலில் தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் , ஆதிதிராவிடர் நல அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிவா மற்றும் கோயில் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க  கண்காணிப்பு கேமராவில் வைத்து போலீஸ் கண் காணித்தனர்.ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villiyanur, Thirukkameswarar Temple Chariot Festival Deputy Governor Chief Minister Rangasamy participation


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->