10 வாலிபர்களை ஏமாற்றிய கல்யாண ராணி கைது!
The wedding queen who cheated 10 young men arrested
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் ஒருவர் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுக்கும் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமான நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அதற்காக முதல் நாள் திருவனந்தபுரம் அழைத்து வரப்பட்டார் ரேஷ்மா.
வருங்கால கணவரான பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பர் வீட்டில் ரேஷ்மாவை தங்க வைத்தார். அப்போது திருமண அலங்காரத்திற்காக ரேஷ்மா அழகு நிலையம் சென்றநிலையில்தான் அவரை பற்றி சில தகவல்கள் கிடைத்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது உடமைகளை பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பருடன் சேர்ந்து சோதனை செய்தபோது ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரேஷ்மாவு பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.
மேலும் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பேசி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் எப்படி? மாறி மாறி ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? என விசாரித்த போது, ஆன்லைனில் விளம்பரப்படுத்தியும், அதில் வரும் திருமண வரன் தகவல்களை சேகரித்தும் ரேஷ்மா திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மாவட்டத்திற்கு ஒரு கதை சொல்லி பலரை திருமணம் செய்த கல்யாண ராணி ரேஷ்மா, 10-க்கும் மேற்பட்டோரை இதுபோல் ஏமாற்றி திருமண வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The wedding queen who cheated 10 young men arrested