காங்கிரஸ் கட்சியில் அதிரடி திருப்பம்! ஒன்றிணைந்த பைலட் - கெலாட்! தொண்டர்கள் கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் நீண்ட காலமாக நிலவி வந்த காங்கிரஸ் உள்கட்சிப் பிளவுக்கு முன்னோட்டமான ஒரு நல்லிணக்க முயற்சியாக, சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூரில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்தார்.

இருவருக்கும் இடையில் 2020ல் கிளம்பிய சண்டை, காங்கிரசை பலவீனப்படுத்திய நிலையில், இப்போது இருவரும் நேரில் சந்தித்திருப்பது சமாதான சாத்தியங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

பைலட், தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு நாளுக்காக ஜூன் 11 அன்று தௌசாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கெலாட்டை தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளார்.

2018ல் காங்கிரஸ் ஆட்சி வந்தபோது முதல்வர் பதவியை கெலாட் பெற்றதைத் தொடர்ந்து பைலட்டுடன் ஏற்பட்ட விரிசல், 2020ல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அவர்களுக்குள் நடைபெற்ற நேரடி உரையாடல், முன்னாள் எதிரிகளாக இருந்த இருவரையும் இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இச்சந்திப்பு, காங்கிரசுக்குள் புதிய நம்பிக்கை மற்றும் ஒருமித்த செயற்பாட்டுக்கான ஒரு தொடக்கமாக மாறுமா சந்தேகம் இருந்தாலும், தற்போது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது..
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan congress Ashok Gehlot sachin pilot


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->