விழுப்புரம்: குறுக்கே வந்த ஆடு! அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து! 10 பேர் காயம்!
Vilupuram Road accident
விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய சரக்கு லாரி, மடப்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது, சாலையைக் கடக்க முயன்ற ஆடு ஒன்று எதிரில் வந்தது.
அதைப் மோதாமல் தவிர்க்க முயன்ற ஓட்டுநர், வாகனத்தை ஓரமாக திருப்பிய நிலையில் சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து, அந்த லாரியின் பின்னால் ஹைதராபாத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஒரு பெரிய சரக்கு லாரியும், அதைத் தொடர்ந்து வந்த காஞ்சிபுரம்–திருச்சி அரசுப்பேருந்தும் அதே இடத்தில் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீஸார் விரைந்து சம்பவ இடத்தை வந்தடைந்து, காயமடைந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.