விஜய் அரசியலை மொத்தமாக முடித்து விட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர் - கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், "கரூர் சம்பவத்தில் அனைவரும் ஆராய்ந்து, உண்மையை கண்டுபிடிப்பதே முதன்மை, அதன்பிறகு மட்டுமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிலர் விரைவாக விஜய்யை கைது செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள் என்றாலும், சம்பவத்தின் உண்மையை ஆராயாமல் அவர் தான் முழு பொறுப்பு சாட்டுவது தவறு.

இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசியலில் இருந்து விஜய்யை வெளியேற்றுவதற்காக சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அவரை முழுமையாகப் புறக்கணிப்பதே குறிக்கோள் என, காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது தவறு.

காவல்துறை ஏற்கனவே விஜய்யின் மாநாடுகளை கண்காணித்துள்ளதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் அல்லாமல் பலர் அவரைப் பார்ப்பதற்காக வந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்துக்குப் பிறகு, காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி விஜய் உடனடியாக வெளியேறியாரா அல்லது தனியாக வெளியேறியாரா என்பது போன்ற விவரங்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். கரூர் சம்பவத்துக்குப் பிறகு அவர் வீட்டில் முடங்கி கிடக்காமல், பொதுமக்களுக்காக அவர் வெளியில் வருவதே இப்போது அவசியம்.

விஜய் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்; அவரை முடித்து கட்டுவதற்கான முயற்சி செய்கின்றனர். சம்பவத்தை முறையாக விசாரணை செய்து உண்மையை வெளிக்கொள்ள வேண்டும்" என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puthiya tamilagam katchi Krishnasamy Karur Stampede TVK Vijay


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->