அடேங்கப்பா!சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி...!
Prime Minister Modi is going on a three nation tour
மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடானா சைப்ரஸ், கனடா மற்றும் குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக செல்கிறார்.இதில் இன்று பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கிறார்.

இதன் காரணமாக அவர் இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சைப்ரஸ் புறப்பட்டார். மேலும், சைப்ரஸ் நாட்டு அதிபரான நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார். இதில் நாளை வரை அங்கே இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முக்கியமாக தலைநகர் நிகோசியாவில் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் லிமாசோல் நகரில் நடைபெறும் வர்த்தக மன்றத்திலும் சிறப்புரையாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில், இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை கனடா புறப்படுகிறார். 17-ந் தேதி வரை அங்கே இருக்கும் பிரதமர் மோடி, கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.இந்த மாநாட்டுக்கு இடையே ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனி சந்திப்புகளை நடத்தி இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இந்த வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி தொடர்ந்து 6-வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் கனடா பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி 18-ந் தேதி ஐரோப்பிய நாடான குரேஷியா செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளன்கோவிச் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
English Summary
Prime Minister Modi is going on a three nation tour