திருநெல்வேலி வானொலி அறிவிப்பாளர்., பாமகவின் வேட்பாளர் வடிவேல் இராவணன் பற்றி.! - Seithipunal
Seithipunal


கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக வடிவேல் ராவணன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். வடிவேல் இராவணன் தன்னை பற்றிய செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

"நான் 1973ல் தமிழில் இளங்கலை பட்டமும், எம்ஏபிஎல், சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்று உள்ளேன். தமிழ்நாடு அரசின் தேர்வாணயம், தமிழக தலைமைச் செயலக கல்வி அலுவலகம், மத்தியரசின் கனரா வங்கி உள்ளிட்டவற்றி்ல் பணி புரிந்துள்ளேன்.

திருநெல்வேலி வானொலி அறிவிப்பாளராகவும், பின்னாளில் திருச்சி வானொலியில் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றினேன்.

1980ல் போடியில் ஏற்பட்டக் கலவரத்தால் சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம், மனிதநேயத்தின் பால் நம்பிக்கை கொண்ட மருத்துவர் ஐயாவை நாடி இயக்கத்தில் இணைந்தேன்.

 

பின்நாளில் பாமகவின் மதுரை மாவட்டச் செயலராக சமூகநீதிக் காவலரால் நியமிக்கப்பட்டேன். படிப்படியாக கட்சியின் பல பொறுப்புக்களைக் கடந்து வந்த நான், பல லட்சக்கணக்கான தொண்டர்களையும், நிரந்தர வாக்கு வங்கியும், தமிழகத்தின் அரசியல் போக்கையே மாற்றும், தீர்மானிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டேன்.

எண்ணற்ற மேடைகளையும் மக்கள் நலப்போராட்டங்களிலும் பங்கேற்ற எனக்கு மருத்துவர் ஐயாவால் இன்று அதிமுகவின் வெற்றிக்கூட்டணியின் கீழ் வேளூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டேன். என் தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தமிழகத்திலேயே கீழ்வேளூரை முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk candidate ​Vadivel Ravanan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->