விடுதலையானவுடன் முக்கிய புள்ளிகளை அடுத்தடுத்து சந்தித்த பேரறிவாளன்.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து நேற்று விமான நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை தனது தாயாருடன் சென்று நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு தனது தாயாருடன் சென்று பேரறிவாளனை சந்தித்தார். அப்போது இருவரும் ஓ பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

இவரை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தனது விடுதலைக்காக அதிமுக அடுத்த நடவடிக்கைக்காக பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perarivalan meet ops and eps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->