பொறுமை கடலினும் பெரிது, கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்...! - பிரேமலதா - Seithipunal
Seithipunal


வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது,பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களின் பதவிக்காலம்.இதைத்தொடர்ந்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.

இதில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா,அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், ம.தி.மு.க.வின் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.அவ்வகையில், அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தில் ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

தி.மு.க. கூட்டணிக்கு சட்டசபையிலுள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதுபோல அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.மேலும், மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணில் தேமுதிக அங்கம் வகித்தது. அப்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதாக உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

ஆனால் அப்படி உறுதி அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டயில் தேமுதிக இடம் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பினால், மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்த வகையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி குறித்து பிரேமலதா விஜயகாந்த தெரிவிக்கையில்,"பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Patience is greater than the ocean we will announce it at the Cuddalore conference Premalatha


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->