'பிரதமரின் திடீர் அறிவுரைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது'; பெ.சண்முகம் சாடல்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் திடீர் அறிவுரைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்  குறிப்பிட்டுள்ளதாவது;

''பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடம், “வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டும், தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும், வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்று உபதேசம் செய்துள்ளார்.

பிரதமரின் இந்த திடீர் அறிவுரைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த உரையானது சாதாரண ஏழை, எளிய மக்கள் தலையில் மிகப்பெரிய கல்லை தூக்கிப் போடப்போகிறாரோ என்ற சந்தேகத்தை எழுக்கிறது.

குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை விண்ணை தொடும் அளவுக்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்கான ஒரு பீடிகையாகவே இத்தகைய கருத்துக்களை முன்வைத்து வருகிறதோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Shanmugam slams the Prime Minister stating that his sudden directives have instilled great fear among the public


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->