படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்.! திமுக அரசை சாடிய ஓபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ஒரே நாளில் ரத்து செய்த திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுக்க ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் நலன் காக்கப்படும் என்ற வாக்குறுதியையும், திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகளை ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதியும் திமுகவால் அளிக்கப்பட்டது.

பத்திரிக்கையாளர்களின் நலன் காக்கப்படும் என்று சொல்லிவிட்டு அவர்களின் நலனை கிடைக்கின்ற பணியை திமுக அரசு மேற்கொண்டிருப்பது படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மதுரை மாவட்டம் சூரியா நகரில் 86 பத்திரிகையாளர்களுக்கு வீடு மனைப்பட்டா வழங்கப்பட்டதாகவும், மொத்தமுள்ள 86 பேரில் 46 பேர் மூன்று சென்ட் நிலத்திற்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பட்டா பெற்ற விட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு 2.5 கோடி ரூபாய் செலுத்தி உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் பணம் செலுத்தி பட்டா பெற தயாராக உள்ளதாகவும், பணம் செலுத்தியவர்களின் பெரும்பாலானோர் வட்டிக்கு கடன் பெற்று பணம் செலுத்தியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 50 கிலோமீட்டர் சுற்றளவில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினர் பெயரில் எந்தவித சொத்துக்களும் வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவு உள்ளிட்ட பல நிபந்தனைகள் வீட்டுமனை உத்தரவில் குறிப்பிட்டுள்ளதால் இந்த நிபந்தனைகளை தளர்த்த கோரி தமிழக முதலமைச்சரவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிற பகுதிகளில் வீட்டுமனைகள் வழங்கிய போது இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை என்றும் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் யாரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இல்லை என்றும், அவர்களுக்கு ஏற்கனவே வீடு நிலம் உள்ளது என்றும் தெரிவித்து 38 பேரின் பட்டாக்களை முன் தேதியிட்டு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் பணி மாறுதல் செல்வதற்கு முன்பு ரத்து செய்து விட்டதாக பத்திரிக்கையாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பணம் செலுத்தி வீட்டு மனை பட்டா பெற்றவர்களின் பட்டாவினை ரத்து செய்வது என்பதும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு அளவுகோலை பின்பற்றுவது என்பதும் பத்திரிகையாளர் நலனுக்கு எதிரானது மட்டுமல்லாமல் இயற்கை நியாயத்துக்கு முரணானது. ஓர் அரசு கொள்கை முடிவெடுத்து வீட்டு மனை பட்டா வழங்கிய நிலையில் அரசாணை இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையதல்ல.

திமுக அரசின் இந்த நடவடிக்கை பத்திரிக்கையாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் நலனுக்கு எதிராக திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட வட்டாரத்து ஆணையை உடனடியாக திரும்பப் பெறவும் பத்திரிக்கையாளர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று நிபந்தனைகளை தளர்த்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS criticized the DMK govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->