அடடே அப்படியா! மதுரையில் மாநாடு நடத்தும் ஓ. பன்னீர்செல்வம்...! செப்டம்பர் 4 கோலாகலமாக...
O Panneerselvam hold conference Madurai September 4th grand event
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்பாக விமர்சிக்க வேண்டாம். இதில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்ததாவது," அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும். சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி.அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம்.
எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும். எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது.
அது என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியும். எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும். எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன் " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
O Panneerselvam hold conference Madurai September 4th grand event