நீட் தேர்வு வழக்கை தள்ளிவைங்க - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த கோரிக்கை! உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை தமிழகத்தில் கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது. 

இந்த ரிட் மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்களை ரிட் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு விசாரணை செய்த போது, "மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு, ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவிட்டனர். 

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை இன்று வந்தது. 

அப்போது, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அதன் மீது முடிவு தெரியும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. 

இதனையடுத்து, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET SC Case TNGovt Request


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->