போச்சு! நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்...!
More than a hundred people left OPS team and joined AIADMK
அ.தி.மு.க.வில் நீக்கப்பட்டதிலிருந்து ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார்.ஆனால், அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருத்தராக 'எடப்பாடி பழனிசாமி' தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து வருகிறார்கள்.

அவ்வகையில் சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், நேற்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் விலகி 'எடப்பாடி பழனிசாமி' முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
இதில் திருக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அரிகிருஷ்ணன்,ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி தலைமையில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜன், கூடலூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் தங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
English Summary
More than a hundred people left OPS team and joined AIADMK