Moral ஊழல்! குளறுபடிகளும் முறைகேடுகளும் நிறைந்த நீட் தேர்வுக்கு மானங்கெட்ட அதிமுக ஜிங்... ஜாங்...அடிக்கிறது! - முதலமைச்சர்
Moral corruption AIADMK is humiliating NEET exam which is full irregularities and irregularities Chief Minister
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மராட்டியத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதி அவர் குறிப்பிட்டதாவது,"நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு.

அதனால்தான் நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம், நீட் தேர்வு நீட்டாக இல்லை (Neat), அதற்கான காரணங்கள் எங்களிடம் உள்ளன.தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!" என்று தெரிவித்துள்ளார்.
இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Moral corruption AIADMK is humiliating NEET exam which is full irregularities and irregularities Chief Minister