டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கையோடு சென்னை திரும்பும் அமைச்சர் அன்பில் மகேஷ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை சேலத்தில் நடைபெற்ற பாரதி வித்யாலய சங்கத்தின் பவள விழா மற்றும் தனியார் பள்ளிகளுக்களுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் "வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் கார் மூலம் சென்னை திரும்புகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister AnbilMahesh return to Chennai after being discharged


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->