நான் அமைச்சராக உயர துர்கா ஸ்டாலின் தான் காரணம்! பரபரப்பை கிளப்பிய மெய்மநாதன்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அரசு சார்பில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் "கடந்த 2016 ஆம் ஆண்டு ஆலங்குடியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று தந்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமைச்சராக பதவி உயர்வு பெற்றதற்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தான் காரணம்.

இல்லையென்றால் என்னுடைய அரசியல் திசை மாறி சென்று இருக்கும்" என பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கட்சியிலும் ஆட்சியிலும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத துர்கா ஸ்டாலின் தான் அமைச்சராக பதவி உயர்வு பெற காரணம் என மெய்யநாதன் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MeiyaNathan said Durga Stalin was reason for getting promotion as minister


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->