மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்று கொடுத்த விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
madhya pradesh Islam Hindu
மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத்தரப்படுவதாக தகவல் வெளியானது. இது மதமாற்ற முயற்சியாக உள்ளதா என்ற சந்தேகத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் மத்தியப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன், பராசியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு அனுமதி பெறாத மதரஸாக்கள் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் இந்து குழந்தைகளும் கல்வி பயில்கின்றனர். இந்த சூழலில், அந்த 556 குழந்தைகளுக்கு குர்ஆன் கற்றுத்தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்த ஆணையம், “இந்து குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றும் நடவடிக்கையா இது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மாநில கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்களில் அறிக்கை தருமாறும் உத்தரவிட்டுள்ளது.
ஆணையத்தின் உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ, “அனுமதியின்றி மதக் கல்வி வழங்கப்படுவது சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 28(3)க்கு எதிரானது. இந்து குழந்தைகள் உடனடியாக மதரஸாக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், அனுமதியின்றி இயங்கும் மதரஸாக்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
English Summary
madhya pradesh Islam Hindu