முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி,  போராட்டத்தை அறிவித்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் தனி மாவட்டம் கோரி முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்கான போராட்டம் நடத்த உள்ளதாக கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழு ஓருருங்கிணைப்பாளரும், 
 பாமக, வன்னியர் சங்க நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான (பாமக) ம.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில்,

"தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதியை  நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (18.04.2022) திங்கள் கிழமை சார்பில் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது" 

இவ்வாறு அந்த அறிவிப்பில் ம.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ma Ka Stalin Announce protest for Kumbakonam new Districts Issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->